பல்லடம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காயம்!

கோவையிலிருந்து திருமண நிகழ்வுக்காக கரூர் நோக்கி சென்ற கார் மீது பல்லடம் அடுத்த மாதப்பூர் என்ற இடத்தில் கேரளாவிற்கு சென்ற லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த மாதப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடம் அருகே இன்று காலை 10 மணி அளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி திருமண நிகழ்விற்காக காரில் பயணித்த குடும்பத்தினர் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.



இந்நிலையில் கார், பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கரூரிலிருந்து கேரளாவிற்கு சென்ற லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகாலட்சுமி(27), சோமுகுமார்(38), பிரனேஷ்(38), நித்திஷ்(11), க்ரிதீஷ்(11), மற்றும் சசிரேகா(57) ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். 



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் காயமடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறு பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 



விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் வரை சாலையின் நடுவே தடுப்புகள் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் அதிக அளவிலான விபத்துகளை தடுக்க சாலை நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...