கொரோனாவால் வேலையிழந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க புதிய திட்டம்!

புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்கிட ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்கிட ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோர் 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக புலம் பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் MIGRANTS EMPLOYMENT GENERATION PROGRAMME (MEGP)] என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

கொரோனா பரவல் காரணமாக 2020 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியவர்கள் வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ 15 லட்சம் திட்ட மதிப்பீட்டினும் துவங்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும்.

சொந்த முதலீடாக பொதுப் பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சம் 2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.இந்த மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின், கடனுக்கு சரி கட்டப்படும்.

இந்த திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tngov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் - 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391878, 239731 என்ற எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...