கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

கோவையில் சாக்கு வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் சேர்ந்து, சங்க கட்டிடத்தின் சாவி மற்றும் காசோலைகளை எடுத்துச் சென்றதாகவும் அதனை மீட்டுத்தர வலியுறுத்தியும் தற்போதைய நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை: கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத்திற்கு விரோதமாக செயல்படும் முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் தற்போதைய நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான், செயலாளர் மதியழகன், பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் இன்று கோவை மாநகர ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.



இதனையடுத்து மனு குறித்து கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான் கூறியதாவது. கோவை சாக்கு வியாபாரிகள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சங்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தின் மூலம் நலிந்த உறுப்பினர்களுக்கு வீட்டு மனைகளை சங்கத்தின் மூலமாக குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



ஆனால் முன்னாள் நிர்வாகிகள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து சங்கத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் சங்க நிர்வாகிகள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து காசோலைகள், கட்டிட சாவி உள்ளிட்டவற்றை எடுத்து சென்று விட்டனர்.

நாங்கள் பலமுறை கேட்டும் திருப்பி தரவில்லை எனவே இதுகுறித்து கோவை மாநகர ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...