சிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் - நெரிசல் கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தகவல்!

சிங்காநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சோதனை அடிப்படையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் முழுமையாக கட்டுக்குள் உள்ளதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சிங்காநல்லூர் சந்திப்பில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை மாநகர் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய அவிநாசி சாலை, சுங்கம், ப்ரூபீல்ட் சாலை, வடகோவை, ஆத்துப்பாலம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிகாடுகள் மூலமாக தற்காலிக ரவுண்டானா மற்றும் “U turn” உள்ளிட்ட மாற்றங்களை செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். 



இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அண்மையில் கோவை வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வந்தது.

இதனிடையே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீசார் சார்பில் சோதனை அடிப்படையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.



அதன்படி அவிநாசி சாலையில் இருந்து சிங்காநல்லூர் சந்திப்பு வழியாக வெள்ளலூர் செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாக சென்று “U turn” செய்து மீண்டும் இடது புறமாக வெள்ளலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. 



இதேபோல் அவிநாசி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை அருகே “U turn” எடுத்து இடது புறமாக அவிநாசி சாலைக்கு செல்லும் வகையில் பேரிகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் நேராக செல்லும் வாகனங்கள் எந்த இடையூறும் இல்லாமல் சாலையில் செல்ல வகை செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் வழக்கமாக சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீண்ட சிக்னலில் நின்று வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. சோதனையாக செயல்படுத்தி உள்ள இந்தத் திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறையும் என்றால், அதனை நிரந்தரமாக ரவுண்டானா அல்லது தடுப்புகள் அமைக்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...