மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

தொழிலாளர்களுக்கு எதிரான நிபந்தனைகளை கொண்ட உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்திடும்படி கூறும் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து மதுக்கரையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கோவை: மதுக்கரை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு உறுதிமொழி பத்திரத்தை வழங்கி அதில் கையெழுத்திடும்படி தெரிவித்துள்ளனர். 



மொத்தம் 22 நிபந்தனைகளை கொண்ட அந்த உறுதிமொழி பத்திரத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக கூறி அதில் கையெழுத்திட ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆனால் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் வேலை செய்ய முடியும் என கூறியதால் நேற்று மதியம் முதல் 62 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



நேற்று இரவு முழுவதும் அங்கேயே உணவு சாப்பிட்டு தூய்மை பணியாளர்கள் தங்கிய நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...