மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கி கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்தும் கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி திரளாகச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக எம்பி மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கைது செய்த டெல்லி காவல் துறையை கண்டித்தும் பாஜக எம்பி யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாஜக எம் பி யை கைது செய்ய வேண்டும் எனவும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...