மதிமுகவில் இருந்து விலகினார் துரைசாமி!

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுங்கள் என வைகோவுக்கு கடிதம் எழுதிய மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும், திமுகவுக்கு தனது ஆதரவு என்றும், தான் எந்த கட்சியிலும் இணைய போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


திருப்பூர்: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுகவின் அவைத்தலைவர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதம் மதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மை காலமாக துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் இருந்த மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி பேசியதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

திமுகவுக்கு எனது ஆதரவை மட்டும் அளிக்கிறேன். எந்த கட்சியிலும் இணைய போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...