கோவையில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ.40,000 அபராதம்!

கோவை‌ மாநகராட்சியின்‌ அனுமதியின்றி தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ கழிவு நீரை வாகனத்தில்‌ எடுத்து வந்து வெள்ளக்கிணறு பகுதியில்‌ வெளியேற்றிய வாகன உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம்‌ விதிக்கப்பட்டு, வாகனம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை வெள்ளக்கிணறு அருகே அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து இறக்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் வார்டு எண்‌.2க்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில்‌ உள்ள வீடுகள்‌, மற்றும்‌ தொழிற்சாலைகளில்‌ சேகரமாகும்‌ கழிவு நீரை சேகரிக்கும்,‌ தனியார்‌ கழிவு நீர்‌ உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ அதனை மாநகராட்சிக்கு சொந்தமான உக்கடம்‌ கழிவுநீர்‌ பண்ணையில்‌ தான்‌ கொட்ட வேண்டும்‌ என ஏற்கனவே மாநகராட்சி மூலம்‌ தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்‌, வெள்ளக்கிணறு பகுதியில்‌ சில தனியார்‌ வாகனங்கள்‌ கழிவு நீரை பொது இடங்களில்‌ கொட்டுவதாக தொடர்ந்து புகார்கள்‌ வந்த வண்ணம்‌ இருந்தது. அதனடிப்படையில்‌ கடந்த 28ஆம் தேதி TN 22 CD 8773 என்ற பதிவெண் கொண்ட வாகனம்‌ வெள்ளக்கிணறு பகுதியில்‌ சட்ட விரோதமாக பொது இடத்தில்‌ கழிவுநீரை வெளியேற்றும்‌ பொழுது கையும் களவுமாக பிடிபட்டது.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த வாகன உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம்‌ விதிக்கப்பட்டு, வாகனம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது. மேலும்‌, இனிவரும்‌ காலங்களில்‌ தனியார்‌ கழிவு நீர் உறிஞ்சும்‌ வாகனங்கள்‌ இதுபோன்ற தவறான சட்டவிரோத நடவடிக்கைகளில்‌ ஈடுபடும்‌ பட்சத்தில்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, உரிமம்‌ ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...