கோவை பில்லூர் குடிநீர் திட்ட பிரதான குழாயில் நீர் கசிவு - சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்!

பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முத்துக்கல்லார் பகுதியில் உள்ள இத்திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்ட நிலையில், நேற்று அதனை சரி செய்யும் பணிகள் நடப்பதால், சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துக்கல்லார் பகுதியில் உள்ள பில்லூர் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் நீர் கசிவை சரிசெய்யும் பணியின் காரணமாக சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌ உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ வழங்கும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ திட்டம்‌ ॥-ல்‌ வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ முதல்‌ ராமகிருஷ்ணாபுரம்‌ மேல்நிலை‌ தொட்டி வரை உள்ள குடிநீர்‌ கொண்டு வரும்‌ பிரதான குழாயில்‌ முத்துக்கல்லார்‌ என்ற இடத்தில்‌ நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனை சரி செய்யும்‌ பணி இன்று (30.05.2023) நடைபெற்று வருவதன் காரணமாக பில்லூர்‌ திட்டம்‌ ॥-ன்‌ மூலம்‌ குடிநீர் விநியோகிக்கப்படும்‌ சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, கணபதி, காந்திபுரம்‌, புலியகுளம்‌, ரத்தினபுரி, சித்தாபுதூர்‌ மற்றும்‌ உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது.

பொதுமக்கள்‌ சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...