மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் - வியாபாரிகள் சங்கம் மனு!

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் போது, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் போது பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

கோவை மாநகராட்சி நிர்வாகம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை அபிவிருத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை எருக்கம்பெனி மைதானத்தில் அமைத்துக் கொள்ளும்படி வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 



இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் தாங்கள் அதே இடத்திலேயே கடைகளை அமைத்துக் கொள்கிறோம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் எருக்கம்பெனி வளாகத்தில் சாலைகள் கழிப்பிட வசதி, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த இடத்தில் கடைகளை அமைக்கும் பொழுது 20 டன், 30 டன் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மண்ணில் புதைந்து விடும். 

எனவே புதிய மார்க்கெட் இடமாற்றம் செய்யும் பொழுது கடைகள் அமைப்பதற்கான வசதி, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உணவருந்த தேவையான கேண்டீன் உள்ளிட்ட வசதிகள் சாக்கடை வசதி காய்கறிகளை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய போதுமான இடங்கள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். 

அதுவரை தாங்கள் இதே இடத்திலேயே வியாபாரம் செய்து கொள்வதாகவும் சாலைகளை மட்டும் பழுது பார்த்துக் கொடுத்தால் போதுமானது. 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...