மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் - வியாபாரிகள் சங்கம் மனு!

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் போது, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் போது பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

கோவை மாநகராட்சி நிர்வாகம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை அபிவிருத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை எருக்கம்பெனி மைதானத்தில் அமைத்துக் கொள்ளும்படி வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 



இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் தாங்கள் அதே இடத்திலேயே கடைகளை அமைத்துக் கொள்கிறோம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் எருக்கம்பெனி வளாகத்தில் சாலைகள் கழிப்பிட வசதி, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த இடத்தில் கடைகளை அமைக்கும் பொழுது 20 டன், 30 டன் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மண்ணில் புதைந்து விடும். 

எனவே புதிய மார்க்கெட் இடமாற்றம் செய்யும் பொழுது கடைகள் அமைப்பதற்கான வசதி, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உணவருந்த தேவையான கேண்டீன் உள்ளிட்ட வசதிகள் சாக்கடை வசதி காய்கறிகளை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய போதுமான இடங்கள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். 

அதுவரை தாங்கள் இதே இடத்திலேயே வியாபாரம் செய்து கொள்வதாகவும் சாலைகளை மட்டும் பழுது பார்த்துக் கொடுத்தால் போதுமானது. 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...