கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச்சென்ற நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பணம் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை பெரிய கடை வீதியில் கோவையின் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவில் வளாகத்தினுள் நுழைந்து மேற்கு பக்கம் அமைந்துள்ள ஆதி கோனியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச் சென்றார். 

இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் சிவன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (எ) சதீஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் திருட பயண்படுத்திய இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...