சூலூர் அருகே நீராதார குட்டையை ஆக்கிரமித்துள்ள தனியார் தொழிற்சாலை - பொதுமக்கள் மனு!

சூலூர் அருகே விவசாயத்திற்கு நீர் ஆதராமாக உள்ள குட்டையை தனியார் தொழிற்சாலை ஒன்று ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.



கோவை: சூலூர் அருகே விவசாய நீராதார குட்டையை தனியார் தொழிற்சாலை ஆக்கிரமித்துள்ளதை தடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில் பாத குட்டை என்ற நீர்பிடிப்பு பகுதி அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த குட்டை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குட்டையில் சேகரமாகும் நீர் இதன் அருகில் உள்ள பெரிய குட்டைக்கு செல்கிறது. 

இந்த இரண்டு குட்டைகளும் ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம், கொள்ளுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இதனிடையே, பாத குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைத்துள்ளதாகவும், சிலர் வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், பாத குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி குட்டையை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...