சூலூர் அருகே நீராதார குட்டையை ஆக்கிரமித்துள்ள தனியார் தொழிற்சாலை - பொதுமக்கள் மனு!

சூலூர் அருகே விவசாயத்திற்கு நீர் ஆதராமாக உள்ள குட்டையை தனியார் தொழிற்சாலை ஒன்று ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.



கோவை: சூலூர் அருகே விவசாய நீராதார குட்டையை தனியார் தொழிற்சாலை ஆக்கிரமித்துள்ளதை தடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில் பாத குட்டை என்ற நீர்பிடிப்பு பகுதி அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த குட்டை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குட்டையில் சேகரமாகும் நீர் இதன் அருகில் உள்ள பெரிய குட்டைக்கு செல்கிறது. 

இந்த இரண்டு குட்டைகளும் ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம், கொள்ளுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்களுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இதனிடையே, பாத குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைத்துள்ளதாகவும், சிலர் வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி மேற்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இந்நிலையில், பாத குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி குட்டையை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...