கோவை அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகள் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரிய தடாகம் பிரிவில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய சின்ன தடாகம் குட்டவழி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் தடாகம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரிய தடாகம் பிரிவு அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை பெரிய தடாகம் பிரிவு பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கே.பி.எஸ் சேம்பர்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையானது தற்போது நீதிமன்ற உத்தரவினால் செயல்படாமல் உள்ளது.



இந்த நிலையில் அவரது செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாலமுருகன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகளை திருடியதாக சின்ன தடாகம் குட்டவழியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...