கோவை அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகள் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரிய தடாகம் பிரிவில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய சின்ன தடாகம் குட்டவழி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் தடாகம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரிய தடாகம் பிரிவு அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை பெரிய தடாகம் பிரிவு பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கே.பி.எஸ் சேம்பர்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையானது தற்போது நீதிமன்ற உத்தரவினால் செயல்படாமல் உள்ளது.



இந்த நிலையில் அவரது செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாலமுருகன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகளை திருடியதாக சின்ன தடாகம் குட்டவழியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...