சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எனக்கு பிடித்த அணி - சத்குரு பேசும் வீடியோ மீண்டும் வைரல்!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் நிலையில், தனக்குப் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் ஃபீவர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈஷா யோகா மைய நிறுவன சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது விருப்பமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸை ஆதரிக்கும் பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.

இந்தக் காணொளியில், மேற்கிந்திய கிரிக்கெட்டின் அடையாளமான ‘தி யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் சத்குருவிடம், “உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்கிறார். சத்குரு தனக்கே உரித்தான வெடிச்சிரிப்புடன், “நிச்சயமாக சென்னை அணிதான்,” என்கிறார்.

KKR அணியினர் தனது ஆசிகள் வேண்டி தன்னை நாடிய ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றி சத்குரு சொல்லும்போது, “கடந்த முறை KKR அணி இறுதிப் போட்டியில் இருந்தபோது, அவர்கள் என்னை அழைத்து, சத்குரு, நீங்கள் எங்கள் அணியை ஆசீர்வதிக்க வேண்டும் என்றனர்.

அப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள், ‘சென்னை அணிக்கு எதிராக’ என்றார்கள். நான் சொன்னேன், ‘அப்படியென்றால், இது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது,” என்றேன் என சத்குரு சொல்ல., கெய்லும் சத்குருவும் சிரிக்கின்றனர்.

வீடியோவின் இறுதிப் பகுதியில், ஐபிஎல்-லில் கண்டிப்பாக ‘சென்னை தான் நம்பர் ஒன் டீம்’ என்று கிறிஸ் கெய்ல் கருத்துத் தெரிவிக்கிறார், அதற்கு சத்குரு, ‘தோனி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய ஐபிஎல் சீசனில், சத்குரு RCB மற்றும் CSK அணிகளை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...