கோவையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது!

கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த சதீஸ் (30) என்பவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழகி வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வரன் பார்த்து வந்ததால் ஆத்திரமடைந்த சதீஸ், இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நிலையில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நட்பாக பழகிவந்த 27 வயது பெண்ணிற்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சதீஸ், பெண்ணை திருமணம் செய்ய கூடாது என வற்புறுத்தி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று அப்பெண்ணின் பிறந்த நாளை முன்னிட்டு சதீஸ் அவரை கே.ஜி சாவடி அருகே உள்ள ரொட்டிகவுண்டன்புதூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணிடம் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என கூறி மிரட்டியதாக தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சதீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை சதீஸ் மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். 

அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு அழைத்துச் சென்று அனுமதித்த சதீஸ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கத்தியால் குத்தி தப்பிய சதீஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...