கோவையில் போலி முகநூல் கணக்கு மூலமாக மனைவியை இழிவுபடுத்திய நபர் கைது!

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியின் பெயரில் போலி முகநூல் கணக்கினை தொடங்கி, ஆபாச படங்களை பதிவிட்டு மனைவியின் செல்போன் எண்ணை பதிவிட்டு இழிவுபடுத்திய பெண்ணின் கணவரான, சிவகங்கையை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: போலியான முகநுால் கணக்கு தொடங்கி மனைவியை இழிவுபடுத்திய கணவரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், மனைவி மீதான ஆத்திரத்தில் அவரை பழி வாங்க எண்ணிய கணவர், போலியான முகநுால் கணக்கு ஒன்றை தொடங்கினார். அதில், தன் மனைவி, அவரது பெற்றோர் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைத்துக் கொண்டு, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வந்துள்ளார். கூடவே, தன் மனைவியின் மொபைல் போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 



இதனையடுத்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (32) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட, 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கோவை எஸ்.பி., வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், எந்தவித தயக்கமும் இன்றி போலீசாரிடம் புகார் அளிக்க முன் வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...