பல்லடம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎஸ்பியிடம் மனு அளிக்க வந்த மக்கள் திடீர் சாலை மறியல் - பரபரப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அருகேயுள்ள டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த பச்சாபாளையம் பகுதி மக்கள், மனுவை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள டிஎஸ்பி அலுவலகம் முன்பு பச்சாபாளையம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பச்சாபாளையம் பகுதியில் இன்று காலை மாகாளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் 12 சவரன் தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த திருட்டு புகாரில், மின்மயான எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த R.K.ராஜா மற்றும் திமுக உறுப்பினர் அய்யாசாமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக திமுகவை சேர்ந்த நடராஜ் என்பவர் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் சுகன்யாவின் கணவர் ஜெகதீஷ் என்பவர் மின்மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளை தூண்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, மேற்குறிப்பிட்ட நபர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பச்சாபாளையம் பகுதி மக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், புகாரை பெற தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய பொதுமக்களிடம் ஆய்வாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இதனையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியாவை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர். மனு கொடுக்க வந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...