தமிழ்நாடு காவல்துறையில் முதல்முறையாக மோப்பநாய் பிரிவில் 2 பட்டதாரி பெண் காவலர்கள்!

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் 2 இளம் பட்டதாரி பெண் காவலர்கள் கோவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான 6 மாத பயிற்சிகள் தொடங்கியுள்ளது.

கோவை: தமிழ்நாடு காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் 2 இளம் பட்டதாரி பெண் காவலர்கள் கோவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக கோவை மாநகரில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பெண் காவலர்கள் பணிக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையில் உள்ள வஜ்ரா உள்ளிட்ட கனரக வாகனங்களை பெண் காவலர்கள் இயக்குவதற்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் பெண் காவலர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல் துறையில் முதல் முறையாக மோப்பநாய் பிரிவில் பெண் காவலர்களை இணைப்பது குறித்து மாநகர போலீசார் ஆர்வமுள்ள பெண் காவலர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.



அதன்படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கவிபிரியா (25) மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பவானி (26) ஆகிய பட்டதாரி பெண் காவலர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு இளம் பட்டதாரி பெண் காவலர்களுக்கும் மாநகர காவல் மோப்பநாய் பிரிவு துறையில் ஆறு மாதங்கள் பயிற்சி வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

கடந்த 20 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் கவிப்பிரியா மற்றும் பவானி ஆகியோர் பயிற்சிக்கு பின் கோவை மாநகர மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து இளம் பெண் காவலர்கள் கூறியதாவது, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் விருப்பமுள்ள பெண் காவலர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே செல்ல பிராணிகள் மீது அதிக ஆர்வம் உள்ளதால் இப்பிரிவை தேர்வு செய்தோம். இங்கே இருக்க கூடிய காவலர்கள் முறையாக பயிற்சி அளிப்பதோடு, ஊக்குவிப்பதால் பயிற்சி எடுப்பது மிகவும் எளிதாக உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...