கோவை பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சஜித் (40). இவர் கடந்த 18ஆம் தேதி கேரளா சென்ற நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலை விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுரேந்தர் மகன் சஜித் (40). இவர் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி சஜித், தனது வீட்டை பூட்டி, சாவியை தன தந்தையிடம் கொடுத்துவிட்டு, சொந்த ஊரான கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சஜித்தின் தந்தை சுரேந்தர் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்த அவர் உடனடியாக தனது மகன் சஜித்திற்கு தகவல் அளித்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பிரோவை உடைத்து அதில் இருந்த ஏழு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சஜித் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...