ராஜீவ்காந்தி நினைவு தினம் - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி கோவையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.


கோவை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் விளாங்குறிச்சியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



அப்போது, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், முருகேசன், சுந்தரசாமி, கலைச்செல்வன், விவேகானந்தன், முருகானந்தம் மருதாச்சலம், வெங்கடேஷ் மணி, ரங்கசாமி, பாலு மணிக்குமார், முரளி கிருஷ்ணன், சுரேஷ் பொன்னுச்சாமி, துரைசாமி பட்டிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதேபோல், முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.



கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருண்குமார் புருஷோத்தமன் சுரேஷ்குமார் வேலவன் பாலாஜி இந்து ராஜ் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரஜ் ரங்கசாமி அருள் அந்தோணி, மணி குமார் கோகுல் அப்பாஸ் ராஜேஷ் கிருஷ்ணராஜ் சரவணகுமார் சௌந்தர் பிரகாஷ் வெங்கடேஷ் முரளி கிருஷ்ணன் நிசாரூதீன் சீனிவாசன் முருகானந்தம் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...