இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலைமிரட்டல் - கோவையில் கால்டாக்சி ஓட்டுநர் கைது!

கோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சூர்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கால்டாக்சி ஓட்டுநர் பைசல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி நாராயணசாமி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சூர்யா (வயது27). இவர் கன்சல்டிங் வேலை செய்து வருகிறார். மேலும், இந்து முன்னணி இயக்கத்தின் செல்வபுரம் நகர தலைவராகவும் இவர் உள்ளார்.

இவருக்கும் கரும்புக்கடையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் பைசல் (வயது45) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன் விரோதம் காரணமாக இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது சூர்யா, பைசலை கத்தியால் குத்தினார்.

இது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பேரூர் சாலை என்.எஸ்.கே சாலையில் உள்ள தனியார் பேக்கரியில் சூர்யா நின்று கொண்டிருந்தபோது, அதே பேக்கரிக்கு வந்த பைசல் திடீரென சூர்யாவை பார்த்து உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதோடு, ஒருமையில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது சூர்யாவுடன் நண்பர்கள் வெற்றி, பாரத் மற்றும் கார்த்தி ஆகியோர் இருந்ததால் ஏதும் செய்யாமல் பைசல் அங்கிருந்து சென்ற நிலையில், சூர்யா செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த பைசலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...