வடவள்ளி அருகே உடல் எரிந்து அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை வடவள்ளி அருகே இந்திராணி (68) என்ற மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 27வது ஆண்டாக தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் எரிந்து நீண்ட நாட்களாகி அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே மூதாட்டி ஒருவரது சடலம் எரிந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடவள்ளி அடுத்த கே.கே.ஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் நாச்சிமுத்து(81) என்பவரது மனைவி இந்திராணி (68). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 27 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திராணி வடவள்ளி அடுத்த வீரகேரளம் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வடவள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார், எரிந்து நீண்ட நாட்கள் ஆகி அழுகிய நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...