வால்பாறை அருகே தனியார் ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தீயில் கருகி சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: வால்பாறை அருகே தனியார் ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்து உள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் சத்தியபாமா என்பவருக்கு சொந்தமான சிட்டி ஹோட்டல் கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்த நிலையில் ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உணவருந்த அதிகளவில் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 1 மணி அளவில் ஹோட்டல் கடைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.



இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த சேர், டேபிள், மளிகை பொருட்கள், பிரிட்ஜ், கிரைண்டர், உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன.



இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்து உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் இந்த தீ விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...