கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட தலைமை ஆசிரியரின் 6.5 சவரன் நகை பறிப்பு!

கோவை சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி (55) என்பவரது கழுத்தில் இருந்த 6.5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில், போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 6.5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரது மனைவி உஷாராணி (55). இவர் அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உஷாராணி நேற்று மாலை வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது சரவணம்பட்டி ஜனதா நகர் - சிவசக்தி நகர் இடையே செல்லும் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உஷாராணியின் கழுத்தில் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உஷாராணி, லேசான காயமடைந்தார். இது குறித்து உஷாராணி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியரின் செயினை பறித்துக் கொண்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...