கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட தலைமை ஆசிரியரின் 6.5 சவரன் நகை பறிப்பு!

கோவை சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி (55) என்பவரது கழுத்தில் இருந்த 6.5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நிலையில், போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் 6.5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரது மனைவி உஷாராணி (55). இவர் அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உஷாராணி நேற்று மாலை வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது சரவணம்பட்டி ஜனதா நகர் - சிவசக்தி நகர் இடையே செல்லும் மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உஷாராணியின் கழுத்தில் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உஷாராணி, லேசான காயமடைந்தார். இது குறித்து உஷாராணி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியரின் செயினை பறித்துக் கொண்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...