வார்டு எண் 17யில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி பூங்கா.

கோவை மாவட்டம் மேற்கு மண்டலம், வடவள்ளி, 17வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் புதுப்பிக்கப்படாமல் இருந்த மாநகராட்சி பூங்கா தற்போது ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெறும் பூங்காப் பணியினை நேற்று கோயமுத்தூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் காந்திமதி ஆகியோர் நேரில் சென்று மாநகராட்சி பூங்காவினை பார்வையிட்டனர்.



இது குறித்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் பேசுகையில்; வடவள்ளி 17வது வார்டு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா 1800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்காவின் பராமறிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் பூங்கா பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் இப்பூங்காவின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து மாநகராட்சி பூங்கா விரைவில் திறக்கப்படும். தற்போது குருசாமி நகர் மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் நடத்து செல்லும் நடைபாதை விரிவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, இளைஞர்கள் இறகு பந்து விளையாடுவதற்கான தனி இடம், முதியவர்கள் அமருவதற்கு இருப்பிடம், பூங்காவின் சுற்று வட்டாரத்தில் 6 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பூங்காவிற்கு சுற்று புறத்திலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும் வெளிப்புறத்தில் இருசக்கர வாகனத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது; ஆறு மாதங்களுக்கும் மேலாக எங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமறிக்கப்படாமல் இருந்தது. புதற்கடுகளாக இருந்த இப்பகுதியை விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  மாநகராட்சியிடம் மனு அளித்தனர். இல்லையென்றால் நாங்கள் எங்கள் பகுதியை பரமாறித்து கொள்வதாக கூறிய பின்னர், மாநகராட்சி தற்போது பூங்கா பணியினை விரைவில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது இப்பூங்காவிற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்பூங்கா காலை 6 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்கப்படுகிறது. இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...