கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் மனு!

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுவதால், அங்குள்ள கடைகளை முன் அறிவிப்பின்றி காலி செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்துவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.



கோவை: காந்திரபுரம் சிறைச்சாலை மைதானத்தில் போடப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியையொட்டி அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதான பகுதியில் அரசு பொருட்காட்சி போடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று துவங்கப்பட்ட இந்த பொருட்காட்சி அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். 45 நாட்கள் பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த அரங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி சிற்றுண்டி கடைகளும், போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் சிற்றுண்டி கடை வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், அரசு பொருட்காட்சியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இடம் சுத்தம் செய்யப்படாத காரணத்தினால், அதிகாரிகள் வாய் வார்த்தையை நம்பி வேறு இடத்தில் கடைகளை அமைத்தோம். இந்நிலையில் தற்போது அதிகாரிகள் அரசு தரப்பில் எவ்வித முறையான கடிதமும் வழங்காமல் அக்கடைகளை எல்லாம் அகற்ற கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை தங்களுக்கு சுத்தம் செய்து தர வேண்டும். இல்லையெனில் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப தர வேண்டும். கடந்த முறை தங்களுக்கு அளிக்கப்பட்ட சில சலுகைகளும் முறை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...