கோவை ஒண்டிப்புதூர் அருகே 12 வயது சிறுமி மாயம் - இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடல்

சிறுமி கடைசியாக ஒண்டிப்புதூரில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில் எறிய சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சிறுமி குறித்து எதேனும் தகவல் தெரிந்தால், காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா (38). இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது கோடை விடுமுறை என்பதால், நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டு தனிப்படைகள் அமைத்து மாயமான 12 வயது சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், சிறுமியின் உறவினர்கள் அவரது புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். சிறுமியை பார்த்தால், உடனடியாக தகவல் அளிக்குமாறு பெற்றோரின் தொலைபேசி எண்களை பதிவு செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுமி மாயமான வழக்கின் முக்கிய திருப்பமாக, ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில், மாயமான சிறுமி ஏறும் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து உள்ளனர். தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எங்கு சென்றார்...? அவர் கடத்தப்பட்டுள்ளாரா..? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், முக்கிய இடங்களான இரயில் நிலையம், பேருந்து நிலையங்கள ஆகிய இடங்களில், சிறுமியை தேடி வருகின்றனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...