கோவையில் என்ஐஏ-வை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மதுரை வழக்கறிஞர்களை கைது செய்த என்ஐஏ-வை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். என்ஐஏ-வின் இச்செயலுக்கு பல்வேறு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இச்செயலை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் வழக்காடுவது என்பது அவர்களின் தொழில் கடமை, தொழில்முறை என தெரித்த அவர்கள், வழக்கறிஞர்களை கைது செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இதில் வழக்கறிஞர்கள் ஜோதி, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், வெண்மணி, டயானா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...