கோவையில் என்ஐஏ-வை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மதுரை வழக்கறிஞர்களை கைது செய்த என்ஐஏ-வை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். என்ஐஏ-வின் இச்செயலுக்கு பல்வேறு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இச்செயலை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் வழக்காடுவது என்பது அவர்களின் தொழில் கடமை, தொழில்முறை என தெரித்த அவர்கள், வழக்கறிஞர்களை கைது செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இதில் வழக்கறிஞர்கள் ஜோதி, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், வெண்மணி, டயானா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...