கோவையில் என்ஐஏ-வை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மதுரை வழக்கறிஞர்களை கைது செய்த என்ஐஏ-வை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் யூசஃப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். என்ஐஏ-வின் இச்செயலுக்கு பல்வேறு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இச்செயலை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் வழக்காடுவது என்பது அவர்களின் தொழில் கடமை, தொழில்முறை என தெரித்த அவர்கள், வழக்கறிஞர்களை கைது செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

இதில் வழக்கறிஞர்கள் ஜோதி, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், வெண்மணி, டயானா, தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...