கோவை பீளமேடு அருகே இளைஞரை கத்தியால் குத்திய வடமாநில முதியவர் கைது!

கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒரிசாவை சேர்ந்த பிராவாட் மாலிக் (28) என்பவரை லாஜ்ரூஷ் டொப்போ (70) என்ற முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநில இளைஞரை முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கொன்டரப்பரா பகுதியை சேர்ந்த மோகன் மாலிக் என்பவரது மகன் பிராவாட் மாலிக் (28). இவர் கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை கட்டட வேலைக்காக அதே பகுதியில் சக ஒடிசா தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிராவாட் மாலிக் அறையில் தங்கிருக்கும் லாஜ்ரூஷ் டொப்போ (70) என்பவரது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறையில் இருந்த பிராவாட் மாலிக்கிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லாஜ்ரூஷ் டொப்போ அங்கிருந்த கத்தியை எடுத்து பிராவாட் மாலிக் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் இளைஞரை கத்தியால் குத்திய லாஜ்ரூஷ் டொப்போவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...