கரூர் - பல்லடம் இடையே செல்லும் பேருந்தில் ஜூஸ் கொடுத்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயற்சி!

கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் கொடுத்த ஜூசை குடித்த இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: கரூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜூஸ் கொடுத்து பிக்பாக்கெட் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.



இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...