கரூர் - பல்லடம் இடையே செல்லும் பேருந்தில் ஜூஸ் கொடுத்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயற்சி!

கரூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர் ஒருவர் கொடுத்த ஜூசை குடித்த இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: கரூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜூஸ் கொடுத்து பிக்பாக்கெட் அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்மணி இன்று தனது எட்டு வயது மகன் சர்வேஷ் மற்றும் 7 வயது மகன் மித்ரன் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ரேஷ்மாவிடம் வெயிலுக்கு ஜூஸ் குடிக்குமாறு கொடுத்துள்ளார். ரேஷ்மாவும் ஜூசை குடிக்காமல் தனது இரண்டு குழந்தைகளுக்கு அதனை கொடுத்துள்ளார்.



இந்நிலையில், ஜூசை குடித்த சிறிது நேரத்திலேயே பேருந்து பல்லடம் அருகே வந்தபோது சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இரண்டு குழந்தைகளையும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



2 குழந்தைகளுக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர் கொடுத்த ஜூசை குழந்தைகளுக்கு கொடுத்ததால் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...