ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் மார்ச் 5ம் தேதி புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

கோவை மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியினை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூரில் செயல்படுத்தி வருகிறது. இக்கல்லூரிகளில் 17 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 



இக்குழுமங்களின் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகளை பல்வேறு நிறுவனங்களில் பெற்று முதன்மையாக திகழந்து வருகிறது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டராங்களில் பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி இக்கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.

தற்போது, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாக ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டு, வருகின்ற மார்ச் 5-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இக்கோவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் உடன் கணபதி, முருகன், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப். 28 துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. மார்ச் 5ம் தேதியன்று கும்பாபிஷேகம் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடுபத்தினருடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா மற்றும் கோவிலை பற்றிய முழு விபரங்களை அறிய 0422-26784001-7 என்ற எண்ணிற்கோ அல்லது www.srikrishna.ac.in என்ற இணையதள முகவக்கோ தொடர்புகொள்ளலாம் என ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள இக்கல்விக் குழுமங்களின் பேருந்துகள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுகின்றன.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...