பொள்ளாச்சியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை - போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள 2 ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பாத்திரக் கடை ஒன்றின் பூடைத்து உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செந்தில்குமார் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவரது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோல், அருகிலுள்ள சகாயராஜ் என்பவரது ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.4000 பணத்தையும் திருடி சென்ற மர்மநபர்கள், அடுத்த தெருவில் ஒரு பாத்திர கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுட்டுள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்த்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் தடயங்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...