கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8,000 சுகாதார, தூய்மை பணியாளர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8000 சுகாதார மற்றும் தூய்மை பணியாளா்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.



பின்னர்‌, நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்‌. மாநகராட்சி தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு மாநகராட்சி சார்பில் கட்டமில்லா முழு உடல்‌ பரிசோதனை முகாம்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படுகிறது.



இந்த மருத்துவ முகாமில்‌ ரத்த கொதிப்பு, ரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவு, எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்‌ சிகிச்சை தேவைப்படும்‌ நபர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ கட்டணமில்லாமல்‌ மேற்கொள்ளப்படும்‌. தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலம்‌ மிகவும்‌ முக்கியமானது.

அவர்கள் உடல்நலமும்‌, சுகாதாரமும்‌ முழுமையாக கிடைத்திட மாநகராட்சி நிர்வாகம்‌ சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில்‌ நாளொன்றுக்கு 25 நபர்கள்‌ வீதம்‌ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மத்திய மண்டலத்தில்‌ பணியாற்றும் 1290 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்‌. இதனை அனைவரும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த சிறப்பு முகாமில்‌ துணை மேயர்‌ வெற்றி செல்வன்‌, பொது சுகாதார குழு தலைவர்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ பிரபா ரவீந்திரன்‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர்‌ லட்மிநாராயண ரெட்டி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...