கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8,000 சுகாதார, தூய்மை பணியாளர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 8000 சுகாதார மற்றும் தூய்மை பணியாளா்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.



பின்னர்‌, நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக தூய்மை பணியாளர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்‌. மாநகராட்சி தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு மாநகராட்சி சார்பில் கட்டமில்லா முழு உடல்‌ பரிசோதனை முகாம்‌ ராமகிருஷ்ணா மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படுகிறது.



இந்த மருத்துவ முகாமில்‌ ரத்த கொதிப்பு, ரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவு, எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்‌ சிகிச்சை தேவைப்படும்‌ நபர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ கட்டணமில்லாமல்‌ மேற்கொள்ளப்படும்‌. தூய்மை பணியாளர்களின்‌ உடல்நலம்‌ மிகவும்‌ முக்கியமானது.

அவர்கள் உடல்நலமும்‌, சுகாதாரமும்‌ முழுமையாக கிடைத்திட மாநகராட்சி நிர்வாகம்‌ சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில்‌ நாளொன்றுக்கு 25 நபர்கள்‌ வீதம்‌ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மத்திய மண்டலத்தில்‌ பணியாற்றும் 1290 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்‌. இதனை அனைவரும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த சிறப்பு முகாமில்‌ துணை மேயர்‌ வெற்றி செல்வன்‌, பொது சுகாதார குழு தலைவர்‌ மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்‌ பிரபா ரவீந்திரன்‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர்‌ லட்மிநாராயண ரெட்டி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌, தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...