சொத்துகளை விற்றுவிட்டு கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சொத்துகளை விற்றுவிட்டு தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 80வயது மூதாட்டி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்டு, தன்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.



சொத்தை விற்பனை செய்த பிறகு மூதாட்டியை பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழியும் செய்யாமல் மோசடி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள மூதாட்டி, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவனிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...