சொத்துகளை விற்றுவிட்டு கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சொத்துகளை விற்றுவிட்டு தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 80வயது மூதாட்டி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்டு, தன்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.



சொத்தை விற்பனை செய்த பிறகு மூதாட்டியை பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழியும் செய்யாமல் மோசடி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள மூதாட்டி, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவனிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...