கோவையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம்!

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய காவலர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை நகரில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை நகரில் பல்வேறு பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை மருந்து விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் (26) புல்லி பிரவீன் (26), பிரசாந்த் (26), அமர்நாத் (25) மற்றும் அஸ்வின்குமார் (26), பிரவீன்ராஜ். (27), வடவள்ளி பிரதீப் (26) ஆகிய 7 பேரை கோவை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த காவலர் ஸ்ரீதர் (29) திட்டம் போட்டுக் கொடுத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு உதவியது தெரியவந்தது. மேலும் காவலர் ஸ்ரீதர் போதை கும்பலுடன் வாட்ஸ் அப் காலில் பேசி வந்துள்ளார்.

மேலும் அவர், போலீசார் எங்கு எப்போது ரோந்து வருவார்கள்? போதை மருந்தை எப்படி கடத்தி வர வேண்டும்? யாரிடம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்? என திட்டமிட்டு வகுத்து கொடுத்து போதை கும்பலை வழி நடத்தியுள்ளார்.

போதை கும்பலை சேர்ந்த சுஜி மோகன் உள்ளிட்டோர் வாட்ஸ் அப் காலில் ஸ்ரீதர் பேசியதை மற்றொரு செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு போலீசாரின் விசாரணையின் போது சிக்கியது. ஸ்ரீதர் போதை மருந்து, கஞ்சா கடத்தல் கும்பலிடம் சமீபத்தில் ரூ.1.60 லட்சம் வாங்கியதும், அந்த பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஜாலியாக செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், காவலர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது செல்போன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவருக்கும் ரவுடிகள், போதை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.



இதனிடையே காவலர் ஸ்ரீதர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறையில் உள்ள காவலர் ஸ்ரீதரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் போதை கும்பலுடன் தொடர்பில் இருந்து உதவிய போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிப் (24) கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் போதை மருந்து விற்பனை கும்பலுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார். மேலும் அவர் போதையில் நடனமாடிய வீடியோக்களும் சிக்கியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...