விளைநிலங்களை சேதப்படுத்தும் மக்னா காட்டு யானை - பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி அடுத்த சரளபதியில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி, வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனசரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளபதி பகுதியில் மக்னா யானை முகாமிட்டு கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனையடுத்து அந்த யானை விவசாய தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

ஆனால் வனத்துறைக்கு போக்கு காட்டிய மக்னா இரவு நேரத்தில் வெளியேறி மூன்று கும்கி யானைகளுடன் நட்பாக பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கு திரும்ப கொண்டு சென்றனர்.



ஆனால் மக்னா யானை தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விலை நிலங்களை சேதப்படுத்தியும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மேலும் வனத்துறை அலட்சியத்தை கண்டித்து சரளபதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்னா யானையை விரைந்து பிடித்து வன பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தியும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழக அரசும் வனத்துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...