விளைநிலங்களை சேதப்படுத்தும் மக்னா காட்டு யானை - பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி அடுத்த சரளபதியில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி, வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனசரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளபதி பகுதியில் மக்னா யானை முகாமிட்டு கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனையடுத்து அந்த யானை விவசாய தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

ஆனால் வனத்துறைக்கு போக்கு காட்டிய மக்னா இரவு நேரத்தில் வெளியேறி மூன்று கும்கி யானைகளுடன் நட்பாக பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கு திரும்ப கொண்டு சென்றனர்.



ஆனால் மக்னா யானை தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விலை நிலங்களை சேதப்படுத்தியும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மேலும் வனத்துறை அலட்சியத்தை கண்டித்து சரளபதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்னா யானையை விரைந்து பிடித்து வன பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தியும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழக அரசும் வனத்துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...