கர்நாடகா வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை - பல்லடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. இதனை பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது.

224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் களம் கண்டன.



இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளில் பாஜக, மற்றும் இதர கட்சிகளைவிட காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் வகையில், பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகர பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் பன்னாரி, துணை செயலாளர் மணிகண்டன், நகர செயல் தலைவர் மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...