கோவையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 டன் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரி மூலம் கேரளாவிற்கு கடத்திச் சென்ற சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவான தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கோவை - பேரூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அபிப் ரகுமானை போலீசார் இன்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அபிப் ரகுமான் 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...