கோவையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 டன் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரி மூலம் கேரளாவிற்கு கடத்திச் சென்ற சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவான தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கோவை - பேரூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அபிப் ரகுமானை போலீசார் இன்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அபிப் ரகுமான் 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...