கோவையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 டன் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரி மூலம் கேரளாவிற்கு கடத்திச் சென்ற சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவான தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கோவை - பேரூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அபிப் ரகுமானை போலீசார் இன்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அபிப் ரகுமான் 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...