கோவையில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் - ஒருமணிநேரமாகியும் உதவ யாரும் வராததால் பலி!

கோவை வடவள்ளி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சந்திரன்(50) என்ற தொழிலாளியை காப்பாற்ற யாரும் வராததால் ஒரு மணி நேரம் போராடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே பெயிண்ட் அடித்த போது சாரத்திலிருந்து தவறி விழுது தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டருடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50) மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க துவங்கி உள்ளனர்.



சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழ் விழுந்துள்ளார். நான்காவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து அவர் மதில் சுவரில் தலையின் பின் பகுதி மோதியத்தில் உயிருக்கு போராடி உள்ளார். உடன் வேலை செய்தவர்கள் என அருகில் செல்ல பயத்தில் நடுங்கபடியே நின்று உள்ளனர்.



ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரன் ஒரு மணி நேரம் ஆகியும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. யாரும் அருகில் உள்ள‌ மருத்துவ மனைக்கு அழைத்தும் செல்ல வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்துள்ளனர்.



அங்கு வந்து மருத்துவர்கள் அவரை பிசோதனை செய்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயிருக்கு போராடிய நபருக்கு உதவ யாரும் வராததால், தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...