கோவையில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் - ஒருமணிநேரமாகியும் உதவ யாரும் வராததால் பலி!

கோவை வடவள்ளி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சந்திரன்(50) என்ற தொழிலாளியை காப்பாற்ற யாரும் வராததால் ஒரு மணி நேரம் போராடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே பெயிண்ட் அடித்த போது சாரத்திலிருந்து தவறி விழுது தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டருடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50) மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க துவங்கி உள்ளனர்.



சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழ் விழுந்துள்ளார். நான்காவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து அவர் மதில் சுவரில் தலையின் பின் பகுதி மோதியத்தில் உயிருக்கு போராடி உள்ளார். உடன் வேலை செய்தவர்கள் என அருகில் செல்ல பயத்தில் நடுங்கபடியே நின்று உள்ளனர்.



ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரன் ஒரு மணி நேரம் ஆகியும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. யாரும் அருகில் உள்ள‌ மருத்துவ மனைக்கு அழைத்தும் செல்ல வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்துள்ளனர்.



அங்கு வந்து மருத்துவர்கள் அவரை பிசோதனை செய்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயிருக்கு போராடிய நபருக்கு உதவ யாரும் வராததால், தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...