கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் வெளியேற்றம்

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நேற்று பெய்த கனமழையால், லங்கா கார்னர்‌ பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில்‌ வெள்ளநீர் தேங்கியது.

இதனை, வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்‌ விமல்ராஜ்‌, சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

இதேபோல், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட எம்‌.கே.பி. காலனி பகுதியில்‌ நேற்று இரவு பெய்த கன மழையில்‌ மரம்‌ ஒன்று பெயர்ந்து விழுந்தது.



இதனை, கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. அப்போது மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...