வால்பாறை அருகே 3 சிறுத்தைகள் நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் மூன்று சிறுத்தைகள் நடமாடும் காட்சி அப்பகுதியில் உள்ள காவல்நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில தினங்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்தனர். வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை கொன்று சாப்பிட்டுச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவது அங்குள்ள காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரவில் குடியிருப்புகளில் இருந்து நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு தேயிலை தோட்டத்திற்கு அவை சென்றுவிடுகின்றன.



தற்போது காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான சிறுத்தை நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், வால்பாறை பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...