தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி, இறக்குமதி வரியை குறைத்தால் சவரனுக்கு ரூ.5,000 வரை குறையும்!

தொடர் விலை உயர்வின் காரணமாக தங்க நகை விற்பனை குறைந்துள்ளதால், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி 15 சதவீதம் வரியை 11 சதவீதமாகவும், 3 சதவீத ஜி.எஸ்.டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைத்தால், சவரன் விலை ரூ.5,000 வரை உடனடியாக குறையும் என தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை குறைத்தால், விலை ரூ.5,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தங்க நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது,



கோவை மாவட்டத்தில் நாள் தோறும் 200 கிலோ அளவிலான தங்க நகை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விலை உயர்வின் காரணமாக தினசரி விற்பனையானது தற்போது 80 கிலோவாக உள்ளது.

தற்போது, திருமணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளுக்கான சீசனிலும், தங்க நகை விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தினமும் 4 - 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைகளுக்கு நகைகள் வாங்க வருகின்றனர்.

நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நகைக்கடை உரிமையாளர்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். கோவை கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி 15 சதவீதம் வரியை 11 சதவீதமாகவும், 3 சதவீத ஜி.எஸ்.டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைத்தால், சவரன் விலை ரூ.5,000 வரை உடனடியாக குறையும். தங்க நகை விற்பனையும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...