திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல்..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனையான மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.


கோவை: திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக ஆட்சியின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர்.



முன்னதாக அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது,

2 ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3.5 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் கோவை மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நல திட்டம் வழங்க உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.

ஐடி நிறுவனம் பெங்களூருவுக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக் சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது.

2 ஆண்டு சாதனையை தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால், அதில் மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...