திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல்..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனையான மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.


கோவை: திராவிட மாடல் ஆட்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 980 பேருக்கு ரூ.11.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக ஆட்சியின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டனர்.



முன்னதாக அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது,

2 ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3.5 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் கோவை மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நல திட்டம் வழங்க உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும். இதனால் காலை உணவு திட்டத்தை முதல்வர் வழங்கி உள்ளார். 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.

ஐடி நிறுவனம் பெங்களூருவுக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக் சிட்டி வர உள்ளது. செம்மொழி பூங்கா வர உள்ளது.

2 ஆண்டு சாதனையை தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால், அதில் மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...